கோவை துடியலூரில் மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட நீர்த்துளி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

கோவை துடியலூரில் நீர் சேமிப்பு விழிப்புணர்வுக்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர்த்துளி வடிவம் உருவாக்கினர். இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



கோவை: கோவை துடியலூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர் துளி போல கூடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கோவை துடியலூர் பகுதியில் ராசிகா ஈவென்ட்ஸ் சார்பில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காணொளி காட்சி வழியாக பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தண்ணீர் சேமிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து உலக சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார். வி.கே.வி குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் வி.கே.வி சுந்தரராஜன் தலைமை வகித்தார். கண்ணன் பந்தல் நிலையம் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து 3 வயது முதல் 16 வயது வரையிலான ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர் துளி போல் கூடி தண்ணீரின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களுக்கும், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேரில் அங்கீகரித்துள்ள நோபல் உலக சாதனை அமைப்பு தனது 2025 ஆம் ஆண்டுக்கான சாதனை புத்தகத்தில் இடம் அளித்து உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை புத்தக அமைப்பின் சார்பில் அதற்கான சான்றிதழை ராசிகா ஈவென்ட்ஸ் உரிமையாளர் ராசிகாவிடம் அந்த அமைப்பினர் வழங்கினர்.

இந்த பிரம்மாண்ட நீர்த்துளி போல் கூடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ்களை அந்த அமைப்பு வழங்கியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தண்ணீரின் சேமிப்பு குறித்து உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வி.ஜி.மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...