கோவை துடியலூரில் மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட நீர்த்துளி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

கோவை துடியலூரில் நீர் சேமிப்பு விழிப்புணர்வுக்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர்த்துளி வடிவம் உருவாக்கினர். இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



கோவை: கோவை துடியலூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர் துளி போல கூடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கோவை துடியலூர் பகுதியில் ராசிகா ஈவென்ட்ஸ் சார்பில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காணொளி காட்சி வழியாக பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தண்ணீர் சேமிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து உலக சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார். வி.கே.வி குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் வி.கே.வி சுந்தரராஜன் தலைமை வகித்தார். கண்ணன் பந்தல் நிலையம் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து 3 வயது முதல் 16 வயது வரையிலான ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர் துளி போல் கூடி தண்ணீரின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களுக்கும், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேரில் அங்கீகரித்துள்ள நோபல் உலக சாதனை அமைப்பு தனது 2025 ஆம் ஆண்டுக்கான சாதனை புத்தகத்தில் இடம் அளித்து உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை புத்தக அமைப்பின் சார்பில் அதற்கான சான்றிதழை ராசிகா ஈவென்ட்ஸ் உரிமையாளர் ராசிகாவிடம் அந்த அமைப்பினர் வழங்கினர்.

இந்த பிரம்மாண்ட நீர்த்துளி போல் கூடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ்களை அந்த அமைப்பு வழங்கியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தண்ணீரின் சேமிப்பு குறித்து உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வி.ஜி.மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...