வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

கோவையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை எமர்ஜென்சி காலத்துடன் ஒப்பிட்டுள்ளார்.



கோவை: கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் கலவரங்களை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை அவர் விமர்சித்தார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடப்பதாகவும், அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி தவிப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் எல்லையில் காத்திருப்பதாகவும், பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுவது உலகளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இதில் தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

"தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று அவர் கூறினார். நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பெற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயமற்றது என்றும், ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல என்றும் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

"திமுக அரசாங்கத்திற்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கடவுள் தான் புத்தி கொடுக்க வேண்டும்," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது உரையை முடித்தார்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...