வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

கோவையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை எமர்ஜென்சி காலத்துடன் ஒப்பிட்டுள்ளார்.



கோவை: கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் கலவரங்களை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை அவர் விமர்சித்தார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடப்பதாகவும், அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி தவிப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் எல்லையில் காத்திருப்பதாகவும், பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுவது உலகளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இதில் தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

"தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று அவர் கூறினார். நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பெற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயமற்றது என்றும், ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல என்றும் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

"திமுக அரசாங்கத்திற்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கடவுள் தான் புத்தி கொடுக்க வேண்டும்," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது உரையை முடித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...