முதலீடுகளை ஈர்க்க மொரீஷியஸ் முயற்சி: கோவை தொழில்முனைவோர் குழு விரைவில் பயணம்

மொரீஷியஸ் நாட்டில் முதலீடு செய்தால் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்முனைவோரிடம் உறுதியளித்துள்ளனர். விரைவில் கோவை தொழில்முனைவோர் குழு மொரீஷியஸ் செல்ல முடிவு செய்துள்ளது.


கோவை: கோவை தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மொரீஷியஸ் நாட்டில் தொழில் தொடங்கினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை தொழில்முனைவோர் குழு விரைவில் மொரீஷியஸ் செல்ல முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்று, ஜிஎஸ்டி அறிமுகம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, பல்வேறு வரி உயர்வுகள் காரணமாக எம்எஸ்எம்இ தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்துறையினருடன் கலந்துரையாடினர். அவர்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்தால் பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும், கோவை தொழில்துறையினரை மொரீஷியஸ் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

மொரீஷியஸ் நாட்டு நிதித்துறை அதிகாரி சோமில்துத் போலாஹ் பேசுகையில், "மொரீஷியஸ் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகத்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்தால் சிறப்பான வளர்ச்சி பெறலாம்," என்றார்.

நிதித்துறை அதிகாரி செட்நாராயணன்சிங் கூறுகையில், "இருநாடுகளுடன் இணைந்து வணிக திட்டங்களில் முதலீடு செய்வதால் வரிச்சலுகை, மானியம் உள்ளிட்ட பல பயன்களைப் பெறலாம். கோவை தொழில்துறையினர் மொரீஷியஸ் வருவதால் முதலீட்டு வாய்ப்புகளையும் களநிலவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும்," என்றார்.

திட்ட இயக்குநர் தோவினாஷி, "மொரீஷியஸில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவுகளில் முதலீடு செய்யும் தொழில்முனைவோருக்கான வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன," எனத் தெரிவித்தார்.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் கண்காட்சி தலைவர் பொன்ராம் ஆகியோர், மொரீஷியஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று விரைவில் கோவையிலிருந்து தொழில்முனைவோர் குழு மொரீஷியஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...