உடுமலையில் சர்வதேச கராத்தே போட்டி: 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

உடுமலையில் மூன்றாவது ஆண்டு சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 4 முதல் 60 வயது வரையிலான வீரர்கள் 5 பிரிவுகளில் போட்டியிட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூன்றாவது ஆண்டு சர்வதேச அளவிலான கராத்தே போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நான்கு வயது முதல் 60 வயது வரையிலான வீரர்கள் கட்டா, துமிதே, ஓபன் கட்டா, ஓபன் துமிதே, வெப்பன் கட்டா என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நடுவர்கள் கலந்து கொண்டனர்.



மாணவர்களின் திறமைகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் எதிராய், ஈஸ்வர்கப்ளே தலைமையில் 50க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் சாகசம் செய்து காட்டிய நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், மலேசியா நாட்டைச் சேர்ந்த மூத்த கராத்தே ஆசிரியர்கள் ஆனந்தன் விக்னேஸ்வரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் Eswaran, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், கராத்தே போட்டி ஒருங்கிணைப்பாளர் உடுமலை அருள்குமார், உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், வழக்கறிஞர் சிதம்பரசாமி, மருத்துவர் வாசுதேவன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஆடிட்டர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...