கோவையில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு அதிகரிப்பு

கோவையில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Coimbatore: கோவை வ.உ.சி மைதானத்தில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் 4வது ஆண்டாக உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் வி.ஜி. மோகன்பிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் 3,200 பேர் பங்கேற்றனர். 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வீல்சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் பங்கேற்று ஓடினர்.



மாரத்தான் போட்டி வளாகத்தில் மூத்த கேஸ்ட்ரோ என்டரால்ஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் ஆர்த்தோ மருத்துவர் சுமன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: "இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது 11% முதல் 30% வரை அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."

"துரித உணவு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, உடற்பயிற்சியின்மை போன்ற நவீன வாழ்க்கை முறையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். கொழுப்பு படிந்த கல்லீரல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன," என்றனர்.



குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். "முன்பு ஒரு குழந்தை சிகிச்சைக்கு வந்தால், இப்போது ஐந்து குழந்தைகள் வருகின்றனர். உடற்பயிற்சி இன்மை, விளையாட்டு இல்லாமை, அதிக நேரம் செல்போன் பயன்பாடு போன்றவை காரணங்களாக உள்ளன," என்றனர்.

உடல் பருமனால் எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம் ஏற்படுவதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி, சத்தான உணவு அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.



இந்த மாரத்தானில் மூத்த கேஸ்ட்ரோ மருத்துவர்கள் வி.ஜி. மோகன்பிரசாத், கோகுல் கிருபா சங்கர், ஆர்தோ மருத்துவர் சுமன், கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மதுரா சுமன், வம்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...