பொள்ளாச்சியில் கடன் பிரச்சினையால் காண்ட்ராக்டர் தற்கொலை: வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி அதிர்ச்சி

பொள்ளாச்சியில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராததால் மனமுடைந்த காண்ட்ராக்டர் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார், தான் கொடுத்த கடனை திருப்பித் தராததால் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சக்தி குமாருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு ரூ.2.50 லட்சமும், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷாவுக்கு ரூ.1.80 லட்சமும், ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு ரூ.8 லட்சமும் கடனாகக் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மூவரும் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சக்தி குமார், தனது மரணத்திற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பித் தராத மூவரும்தான் காரணம் எனக் கூறி செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு, ஜமீன் கோட்டான்பட்டி ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், சக்தி குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...