பொள்ளாச்சியில் கடன் பிரச்சினையால் காண்ட்ராக்டர் தற்கொலை: வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி அதிர்ச்சி

பொள்ளாச்சியில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராததால் மனமுடைந்த காண்ட்ராக்டர் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார், தான் கொடுத்த கடனை திருப்பித் தராததால் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சக்தி குமாருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு ரூ.2.50 லட்சமும், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷாவுக்கு ரூ.1.80 லட்சமும், ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு ரூ.8 லட்சமும் கடனாகக் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மூவரும் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சக்தி குமார், தனது மரணத்திற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பித் தராத மூவரும்தான் காரணம் எனக் கூறி செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு, ஜமீன் கோட்டான்பட்டி ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், சக்தி குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...