கோவையில் பருத்தி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. பருத்தி தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' (COTTON - The Sustainable Fibre Of The Future) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது.



இந்த கருத்தரங்கத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 9 அன்று மாலை நடைபெற்றது. இந்திய பருத்தி கூட்டமைப்பின் துணைத் தலைவரும் கருத்தரங்கின் சேர்மனுமான நடராஜ் விழாவை துவக்கி வைத்தார்.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் விழாவிற்கு தலைமை வகித்தார்.



இந்த விழாவில் KG குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் L.S. மில்ஸ் சேர்மன் மணிவண்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் பேசுகையில், "இந்தியாவிற்கும் பருத்திக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பருத்தி என்பது வணிகத்திற்கானதாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. பருத்தி உற்பத்திக்கு ஏதுவாக நம் நாட்டின் காலநிலை அமைந்துள்ளது. உலகச் சந்தையின் பருத்தி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "இந்த கருத்தரங்கம், இத்தகைய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் திட்டங்கள் தீட்டி நம் இலக்கை அடைவதற்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்," என்றும் கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு ஆடை உற்பத்தி நிறுவனங்களும் வல்லுனர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...