கோவையில் பருத்தி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. பருத்தி தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' (COTTON - The Sustainable Fibre Of The Future) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது.



இந்த கருத்தரங்கத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 9 அன்று மாலை நடைபெற்றது. இந்திய பருத்தி கூட்டமைப்பின் துணைத் தலைவரும் கருத்தரங்கின் சேர்மனுமான நடராஜ் விழாவை துவக்கி வைத்தார்.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் விழாவிற்கு தலைமை வகித்தார்.



இந்த விழாவில் KG குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் L.S. மில்ஸ் சேர்மன் மணிவண்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் பேசுகையில், "இந்தியாவிற்கும் பருத்திக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பருத்தி என்பது வணிகத்திற்கானதாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. பருத்தி உற்பத்திக்கு ஏதுவாக நம் நாட்டின் காலநிலை அமைந்துள்ளது. உலகச் சந்தையின் பருத்தி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "இந்த கருத்தரங்கம், இத்தகைய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் திட்டங்கள் தீட்டி நம் இலக்கை அடைவதற்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்," என்றும் கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு ஆடை உற்பத்தி நிறுவனங்களும் வல்லுனர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...