உடுமலையில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதியில், குடிபோதையில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் வேடப்பட்டி பகுதியில் நடந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் பகுதியில், குடிபோதையில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) என்பவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், சரஸ்வதியை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முயற்சித்தார்.

இதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் முரண்பட்டு பேசினார். இதையடுத்து, சரஸ்வதி மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சண்முகசுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் சண்முகசுந்தரம் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...