கோவை உக்கடத்தில் ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை உக்கடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3.8 கிமீ நீளமுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் பாலக்காடு நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.



ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலம் 3.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த மக்களை நோக்கி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய மேம்பாலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...