கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்: மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Coimbatore: கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த பணியிட மாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. செல்வபுரம் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. மண்டல சைபர் கிரைம் ஆய்வாளராக இருந்த இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. எஸ்.ஜே.ஏ.பி. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

4. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் நிர்மலா மாநகர குற்றப் பிரிவு-1க்கு மாற்றப்பட்டுள்ளார்.

5. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. குற்றப் பிரிவு-1 ஆய்வாளர் ருக்மணி கிழக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

7. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அமுதா மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

8. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் நிர்மலா தேவி சரவணம்பட்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

9. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் மீனாம்பிகை வெரைட்டிஹால் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. உக்கடம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ்குமார் எஸ்.ஜே.ஏ.பி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11. மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...