மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான பாரம்பரியம் மிக்க மலை ரயில் சேவை ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு குன்னூர் வழியாக தினமும் காலை இயக்கப்படும் இந்த மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 1 முதல் 6 வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

தற்போது, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் இந்த அறிவிப்பினை கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...