கோவை ஆர்.எஸ்.புரம் அருகே அரிசி மண்டி கடையில் பெண் வியாபாரியிடம் லேப்டாப் திருட்டு

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே அரிசி மண்டி கடையில் வாடிக்கையாளர் போல நடித்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், பெண் வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பி லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள சிரியன் சர்ச் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (47) என்ற பெண் வியாபாரி, வி. சி. எம். ரோட்டில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். ஆகஸ்ட் 6 அன்று, 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் கடைக்கு வந்து இட்லி அரிசி வாங்குவதாக கூறினார்.

ராஜேஸ்வரி அரிசி எடை போட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வாலிபர் கடையில் இருந்த எலக்ட்ரானிக் தராசை எடுக்க முயன்றார். ராஜேஸ்வரி கேள்வி கேட்டதும், தெரியாமல் கை பட்டுவிட்டதாக சமாளித்தார். பின்னர், அவர் 5 கிலோ பேக் ஏழு, 2 கிலோ பேக் 5 இட்லி அரிசி கேட்டார்.

ராஜேஸ்வரி அரிசி எடுக்க உள்ளே சென்றபோது, அந்த வாலிபர் கடையில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து ராஜேஸ்வரி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவனமாக அணுக வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களை உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...