கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுவாழ்வு பெற்ற அரசமரம்

கோவை மாவட்டம், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி பார்க்கேட் அருகில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 



இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமைவாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவுசெய்துள்ளனர். 

பின், அதனை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பின் சையது அவர்களைத் தொடர்புகொண்டு மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஓசை சையது தலைமையிலான அமைப்பினர் மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து அந்த அரச மரத்தினை வேருடன் அகற்றி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர்.



மரம் மறுநடவு செய்யப்பட்டு ஒருவார காலத்திலேயே தற்போது துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...