அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு கோரி போராட்டம்

பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு, ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC - ACT) MUTA சார்பில் ஆகஸ்ட் 7 புதன்கிழமை அன்று மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி ஏயுடி கிளை சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் கருப்பு ஆடை அணிந்து நடைபெற்ற இந்த போராட்டம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை மூன்று நாட்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில், பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது முக்கியமானது. தற்போது இந்த சலுகை அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கும் எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குனரின் செயல் முறை ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

புத்தொளி / புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்குதல், கல்லூரி நிர்வாகத்தின் ஆசிரியர் விரோத போக்கினை தடுத்து நிறுத்துதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்துதல் ஆகியவையும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

இந்த போராட்டத்தில் ஏயுடி கிளை தலைவர் என்.அன்பரசு, செயலாளர் எஸ்.சிவசங்கர், பொருளாளர் சுஜா மேதிவ், துணைத் தலைவர் எஸ் முத்துகுமரவேல், இணைச்செயலாளர் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...