அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு கோரி போராட்டம்

பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு, ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC - ACT) MUTA சார்பில் ஆகஸ்ட் 7 புதன்கிழமை அன்று மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி ஏயுடி கிளை சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் கருப்பு ஆடை அணிந்து நடைபெற்ற இந்த போராட்டம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை மூன்று நாட்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில், பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது முக்கியமானது. தற்போது இந்த சலுகை அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கும் எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குனரின் செயல் முறை ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

புத்தொளி / புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்குதல், கல்லூரி நிர்வாகத்தின் ஆசிரியர் விரோத போக்கினை தடுத்து நிறுத்துதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்துதல் ஆகியவையும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

இந்த போராட்டத்தில் ஏயுடி கிளை தலைவர் என்.அன்பரசு, செயலாளர் எஸ்.சிவசங்கர், பொருளாளர் சுஜா மேதிவ், துணைத் தலைவர் எஸ் முத்துகுமரவேல், இணைச்செயலாளர் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...