பொள்ளாச்சி சீனிவாசபுரத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்: வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி

பொள்ளாச்சி-மீன்கரை நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கனமழையால் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. வாகன ஓட்டிகள் எதிர்கொண்ட சிரமங்கள் விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: பொள்ளாச்சி-மீன்கரை நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கனமழை காரணமாக சாலை பல இடங்களில் சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



குண்டும் குழியுமான சாலையால் வாகனங்களை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.



தற்போது, நெடுஞ்சாலைத் துறையினர் சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...