கோவை கார் குண்டு வெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அரபிக் கல்லூரி மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்த்தது அம்பலம்.


Coimbatore: கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே 2022 அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபீன் (28) உயிரிழந்தார். இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சையது அப்துல் ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் ஆவர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் மதப் போதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜமீல் பாஷா அதன் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் மாவட்ட அளவில், அரபி மொழி மையங்களை பல்வேறு இடங்களில் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில், முகமது உசேன், இர்ஷாத் ஆகியோர் கோவையில் இம்மையங்களை தொடங்கினர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "இங்கு ஜமீல் பாஷாவின் பதிவு செய்யப்பட்ட உரைகள் ஒளிபரப்பப்பட்டன. சையது அப்துல் ரகுமானால் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்ட ஜமேஷா முபீன் கோவை கோட்டைமேட்டில் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தினார்" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்களைத் திரட்டியது, தீவிரவாத பயிற்சி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சையது அப்துல் ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...