மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் 5 ஆண்டுகளாக விவசாயத்தையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தும் பாகுபலி யானையை பிடித்து தொலைதூரத்தில் விடக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் பாகுபலி எனப்படும் யானையை பிடித்து தொலைதூரத்தில் விடக்கோரி தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 5 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு யானை தினமும் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை பாகுபலி என அழைக்கப்படுகிறது. இந்த யானையால் ஏற்படும் தொடர் சேதங்களை தடுக்க கோரி, அதனை பிடித்து தொலைதூரத்தில் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், போராட்டக்காரர்கள் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...