உடுமலையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர்.



பேரணி உடுமலை தளி ரோடு பிரிவில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று ரயில்வே சந்திப்பு பாதையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனியார் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா பேரணிக்கு தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்தியப்பிரியா, எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் நிறுவனர் நெல்சன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...