காரமடையில் வீடு புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு

காரமடை குட்டையூரில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற தம்பதியின் வீட்டில் திருடர்கள் புகுந்து 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: காரமடை குட்டையூர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த தம்பதி ராஜு - அங்கம்மாள் ஆகியோரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இக்குடும்பத்தினர் வந்தவாசியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 6) காலை வீடு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...