கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம்

கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை கந்தராபுரம் அருகே உள்ள எல்.ஐ.சி. காலனி பகுதியில் அமைந்துள்ள குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர். அதுமட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி சாலையிலிருந்து குறிச்சிபுதூர் பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட்பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு பகுதி மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்தில் மதுபான கடை அமைப்பதால் ஏற்படக்கூடிய சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...