உடுமலைப் பகுதியில் பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் லட்சார்ச்சனை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் உள்ள பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டியும் இந்த லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.

லட்சார்ச்சனையில் இருபதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர். ரோஜா, துளசி, சம்பங்கி பூக்கள் மூலம் வேத மந்திரங்களுடன் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூமி லட்சுமி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



முதல் நாள் லட்சார்ச்சனை, உபசாரம், சாற்றுமுறை நிறைவு பெற்ற பின் அம்மனுக்கு சிறப்பு மலர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முக்கிய நிகழ்வாக வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...