கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் கூட்டம்: வாகன போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.


கோத்தகிரியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் தலையிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 அன்று இரவு, கோத்தகிரி செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வந்தது.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதன் பின்னரே வாகனங்கள் சாலையில் சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை பார்க்கும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...