திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்றார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை ஆயுதப்படை ஐஜியாக பணியாற்றி வந்தார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் அபிநவு கடந்த மாதம் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லட்சுமி ஐபிஎஸ் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.



பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...