திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்றார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை ஆயுதப்படை ஐஜியாக பணியாற்றி வந்தார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் அபிநவு கடந்த மாதம் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லட்சுமி ஐபிஎஸ் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.



பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...