ரூ.94 லட்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் 504 தவறவிடப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை வழங்கி, மீட்பு குழுவினருக்கு சான்றிதழ்கள் அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட 504 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்கள் வசம் ஒப்படைத்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "2022 ஆம் ஆண்டிலிருந்து தொலைந்த செல்போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை சுமார் 2300 தொலைந்து போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைந்து போன செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "இந்த வருடம் இதுவரை பதிவாகியுள்ள 1100 சிஎஸ்ஆர்-களில் 504 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவைகளையும் மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

சைபர் குற்றங்கள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு மட்டும் இதுவரை 84 எஃப்ஐஆர்-கள் பதியப்பட்டுள்ளன. 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்கள் நிதி சார்ந்தவை. மக்கள் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.



கஞ்சா வழக்குகள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு மட்டும் 242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 13 நபர்கள் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வரும் நபர்களை கண்காணித்து இதுவரை 10 குழுவினரை முடக்கியுள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். சிறையில் இருக்கும்போதே அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

போக்சோ வழக்குகள் குறித்தும் அவர் பேசினார். "கடந்த ஜூன் 30 வரை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்து வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். 'Project பள்ளிக்கூடம்' மூலம் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 கல்வியாண்டில் மட்டும் 'Project பள்ளிக்கூடம்' மூலம் 500க்கும் மேற்பட்ட சிறு குற்றங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...