ரூ.94 லட்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் 504 தவறவிடப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை வழங்கி, மீட்பு குழுவினருக்கு சான்றிதழ்கள் அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட 504 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்கள் வசம் ஒப்படைத்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "2022 ஆம் ஆண்டிலிருந்து தொலைந்த செல்போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை சுமார் 2300 தொலைந்து போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைந்து போன செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "இந்த வருடம் இதுவரை பதிவாகியுள்ள 1100 சிஎஸ்ஆர்-களில் 504 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவைகளையும் மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

சைபர் குற்றங்கள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு மட்டும் இதுவரை 84 எஃப்ஐஆர்-கள் பதியப்பட்டுள்ளன. 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்கள் நிதி சார்ந்தவை. மக்கள் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.



கஞ்சா வழக்குகள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு மட்டும் 242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 13 நபர்கள் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வரும் நபர்களை கண்காணித்து இதுவரை 10 குழுவினரை முடக்கியுள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். சிறையில் இருக்கும்போதே அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

போக்சோ வழக்குகள் குறித்தும் அவர் பேசினார். "கடந்த ஜூன் 30 வரை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்து வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். 'Project பள்ளிக்கூடம்' மூலம் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 கல்வியாண்டில் மட்டும் 'Project பள்ளிக்கூடம்' மூலம் 500க்கும் மேற்பட்ட சிறு குற்றங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...