உடுமலை திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முதலாம் மண்டல பாசனம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீர் திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், காண்டூர் கால்வாயின் நல்லாறு பகுதியில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து நேற்று மாலை காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.



வினாடிக்கு 523 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் தேவையான அளவு தண்ணீர் நிரம்பியதும், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடியில், 28.47 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...