கருணாநிதி நூற்றாண்டு விழா: கோவையில் திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பந்தய போட்டிகள் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஆனைகட்டி மதன் வரவேற்று பேசினார்.

ஒன்றிய துணைச் செயலாளர்கள் எம்.ஆர்.டி செல்வராஜ், சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் கே.சி.கே.சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தக்குமார், திருநாவுக்கரசு, கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முன்னதாக கோவை சின்னதடாகம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட துணை அமைப்பாளர் வே.சூரியன்தம்பி ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MAR.K.ஹக்கீம் தலைமை வகித்தார். இதில் இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர்கள் பா.விக்னேஷ், க.நாகராஜ், பி.கே.அருணாச்சலம், உதயநிதிபாபு, மு.மனோஜ் ஆகியோரது முன்னிலை வகித்தனர்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பாளராக கலந்துக்கொண்டு கொடி அசைத்து இருசக்கர வாகன பந்தய போட்டிகளையும், உறுப்பினர் சேர்க்கையினையும் துவக்கி வைத்தார்கள்.



இரு நிகழ்ச்சிகளிளும் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் அசோக்பாபு ஆறுக்குட்டி, செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக், சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.என்.ஜி.புதூர் ஆனந்தன், சூற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ் பிரசாத், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், மகளிர் அணி பிரபாவதி, சாந்தி, பிரேமா, மருதமலை சரவணக்குமார், சிறுபாண்மையினர் நல உரிமை பிரிவு முராது அலி, இளைஞர் அணி அருண், அசோக் பிரபு, சுகுமார், பிரபு, திலீப், பிரவின் ராஜ், அசோக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் இளைஞர் அணி ஜெகன் பிரசாந்த் நன்றி கூறினார்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...