கருணாநிதி நூற்றாண்டு விழா: கோவையில் திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பந்தய போட்டிகள் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஆனைகட்டி மதன் வரவேற்று பேசினார்.

ஒன்றிய துணைச் செயலாளர்கள் எம்.ஆர்.டி செல்வராஜ், சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் கே.சி.கே.சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தக்குமார், திருநாவுக்கரசு, கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முன்னதாக கோவை சின்னதடாகம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட துணை அமைப்பாளர் வே.சூரியன்தம்பி ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MAR.K.ஹக்கீம் தலைமை வகித்தார். இதில் இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர்கள் பா.விக்னேஷ், க.நாகராஜ், பி.கே.அருணாச்சலம், உதயநிதிபாபு, மு.மனோஜ் ஆகியோரது முன்னிலை வகித்தனர்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பாளராக கலந்துக்கொண்டு கொடி அசைத்து இருசக்கர வாகன பந்தய போட்டிகளையும், உறுப்பினர் சேர்க்கையினையும் துவக்கி வைத்தார்கள்.



இரு நிகழ்ச்சிகளிளும் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் அசோக்பாபு ஆறுக்குட்டி, செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக், சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.என்.ஜி.புதூர் ஆனந்தன், சூற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ் பிரசாத், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், மகளிர் அணி பிரபாவதி, சாந்தி, பிரேமா, மருதமலை சரவணக்குமார், சிறுபாண்மையினர் நல உரிமை பிரிவு முராது அலி, இளைஞர் அணி அருண், அசோக் பிரபு, சுகுமார், பிரபு, திலீப், பிரவின் ராஜ், அசோக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் இளைஞர் அணி ஜெகன் பிரசாந்த் நன்றி கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...