உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டியில் சிறப்பு வழிபாடு

அடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னோர்களின் அறிவுரையின்படி இந்த வழிபாடு கால்நடைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் பலர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திரளான பொதுமக்கள் தர்பணம் கொடுத்தனர்.

உடுமலை, பொள்ளாச்சி, Dharapuram, கிணத்துக்கடவு, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி, நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க இரட்டை மாட்டுவண்டிகளுடன் அடி அமாவாசையன்று திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், காங்கேயம் இன நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர்.

"பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் இங்கு வருகிறோம். இதனால் கால்நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாக உணர்கிறோம்," என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...