தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரம் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான S.V. செந்தில்குமார், தாராபுரம் நகர திமுக செயலாளர் சு. முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...