மாணவர்களின் திறமையை வெளிபடுத்திய 'விங்ஸ் & விண்ட் 2017' ஏரோ மாடலிங் விமான நிகழ்ச்சி


ஸ்கை-ஹை அகாடமி, ஏரோ மாடலிங் ஹாப்பி ஜோன் மற்றும் ஜெட் ஏரோ ஸ்பேஸ் இணைந்து நடத்திய 'விங்ஸ் & விண்ட் 2017' என்னும் 3வது மாவட்ட அளவிலான ஏரோ மாடலிங் போட்டி மற்றும் கோயம்பத்தூரின் பிரதான ஏரோ மாடல் விமான நிகழ்ச்சி சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 6 மணி முதல் துவங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றது. நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். 



இது குறித்து ஸ்கை-ஹை அகாடமி நிறுவனர் கௌதம் பேசுகையில்; கோவையில் 'விங்ஸ் & விண்ட் 2017' என்னும் 3வது மாவட்ட அளவிலான ஏரோ மாடலிங் போட்டி மற்றும் ஏரோ மாடல் விமான நிகழ்ச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சக் க்ளைடர், கடப்புல்ட் க்ளைடர், கண்ட்ரோல் லைன் ஏரோபாட்டிக், ரிமோட் கண்ட்ரோல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. 



இதில் மாணவர்கள் தயாரித்த மாடல் விமானம் இங்கு கொண்டு வந்து அவர்களில் திறமை வெளிபடுத்தினார். இப்போட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி அவர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்களில் படைபாற்றலின் திறமையை வெளிபடுத்தினர். இப்போட்டியில் கலந்து கொண்டு சிறந்த முறையில் திறம்பட செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில் வழக்கப்படும். காலை 6 மணி முதல் தொடங்கிய இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெளி மாநிலங்களிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசுத் தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ஆறுதல் பரிசும், போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை பாராட்டினார்.



இதில், ஸ்கை-ஹை அகாடமி நிறுவனர் சுதர்சன், ஏரோ மாடலிங் ஹாப்பி ஜோன் நிறுவனர் சந்திர பாபு மற்றும் ஜெட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனர்கள் பாலா மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...