கோவையில் வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான பெண்கள் ஆகஸ்ட் 7, 2024க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டார வள பயிற்றுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:

1. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. 01.08.2024 அன்று 25 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

3. ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கூட்டமைப்பில் 2 முதல் 3 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பயிற்சியளிக்க ஆர்வமுள்ளவராகவும், ஒருங்கிணைத்து கண்காணிக்கக் கூடியவராகவும், நல்ல பேச்சுத் திறன் மற்றும் பயிற்சி கையாளும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், கணினியில் குறைந்தபட்சம் MS Word, Excel பயன்படுத்தத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்த தகுதிகள் உள்ளவர்கள் ஆகஸ்ட் 7, 2024 தேதிக்குள், இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் 641 018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...