ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் துறை துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர காவல்துறை துணை ஆணையர் ரோஹித் நாதன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: கோவையில் உள்ள லட்சுமி மில்ஸ் அர்ப்பன் சென்டரில் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவின் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை கோவை நகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) ரோஹித் நாதன் துவக்கி வைத்தார். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி தலைமை தாங்கினார். மருத்துவமனையின் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர், ஜி.கே.என்.எம். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



துணை ஆணையாளர் ரோஹித் நாதன், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், "நாட்டில் சாலைகள் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பால் விபத்துகள் அதிகரித்துள்ளன. உயிர்களைக் காப்பாற்ற உடல் உறுப்பு தானம் மிகவும் முக்கியம். அதிக மக்களை உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் நிறைய உயிர்களை காப்பாற்றலாம்," என்றார். மேலும், பயணம் செய்யும்போது சாலையில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.



Nephrologist மருத்துவர் ராமச்சந்திரன் கூறுகையில், "உடல் உறுப்பு தானத்தில், கண்களை மட்டுமே இறப்பிற்குப் பிறகு எடுக்க முடியும். மற்ற உறுப்புகளை இதயத்துடிப்பு இருக்கும் போது மட்டுமே எடுக்க முடியும். மூளைச்சாவு ஏற்படும் போது மூளை செயலிழந்தாலும் இதயம் இயக்கத்தில் இருக்கும். அப்போது உடல் உறுப்புகளை எடுக்க முடியும்," என்றார். உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவரின் ஒப்புதல் மட்டுமின்றி, இறப்பிற்குப் பின் குடும்பத்தாரின் ஒப்புதலும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.



இந்திய உறுப்பு தானம் தினமான இன்று (03.08.2024) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, உறுப்பு தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை களையும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அதிக மக்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தால், அவர்களது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தால், நிச்சயமாக பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...

கிணத்துக்கடவு தொகுதி வெற்றி வேட்பாளர் S.தாமோதரனை அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து

கோயம்புத்தூரில் BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் NDA சார்பில் AIADMK கிணத்த...

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...