கோவை சிவாஜி காலனியில் வயநாடு பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி

கோவை சிவாஜி காலனியில் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் புஷ்பாணந்தம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை சிவாஜி காலனி பகுதியில் கேரள மாநிலம் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவை சிவாஜி காலனி பகுதியில் "அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை" அமைப்பின் சார்பாக அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் புஷ்பாணந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் வழக்கறிஞர் தமிழலகன், லட்சுமி, திவ்யா, ஜெபா, வர்ஷா வர்ஷினி, மோகன் ராஜா, ஜெயமணி, முத்து, ஞானமணி, குமார், தனலட்சுமி, கோவில் மேடு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...