முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதே தங்களது குறிக்கோள் -அமைச்சர் எஸ்.பி வேலுமணி


அ.தி.மு.க இரு அணிகள் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து திரும்பியவுடன் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

இதனை தொடந்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம், அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்திரிகைகளில் அமைச்சர்கள் பேட்டி அளிப்பதால் குழப்பம் ஏற்படுகின்றது என்பதால், அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் வேலுமணி தெரிவித்தார். 

மேலும், இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் எனவும் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து வந்தவுடன் இரு அணிகள் தரப்பில் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இரு அணிகளும் ஒற்றுமையாக இருந்து செயல்பட இருப்பதாகவும் சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...