பீளமேடு பகுதி -1 சார்பாக அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று இனிப்பு வழங்கும் நிகழ்வு

கோவை பீளமேடு பகுதி -1 சார்பாக, அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று நேரு நகரில் இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில், அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை வரவேற்கும் விதமாக இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பீளமேடு பகுதி -1 சார்பாக, 26 வது வட்டத்தில் நேரு நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 26 வது வட்ட கழக செயலாளர் ஆ.மாடசாமி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் லக்ஷ்மி, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், வெ. துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. சி. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வட்ட கழக நிர்வாகிகள் குருசாமி, அனுசியா, தாமஸ் துறை, தகடூர் செல்வம், வேலுசாமி, பூபதி, வெங்கடேஷ், கார்த்திக், ரஞ்சித், சுந்தரராஜ், அனந்தி, காஸ்டிங் நடராஜ் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் முன்னோடிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...