பீளமேடு பகுதி -1 சார்பாக அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று இனிப்பு வழங்கும் நிகழ்வு

கோவை பீளமேடு பகுதி -1 சார்பாக, அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று நேரு நகரில் இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில், அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை வரவேற்கும் விதமாக இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பீளமேடு பகுதி -1 சார்பாக, 26 வது வட்டத்தில் நேரு நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 26 வது வட்ட கழக செயலாளர் ஆ.மாடசாமி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் லக்ஷ்மி, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், வெ. துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. சி. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வட்ட கழக நிர்வாகிகள் குருசாமி, அனுசியா, தாமஸ் துறை, தகடூர் செல்வம், வேலுசாமி, பூபதி, வெங்கடேஷ், கார்த்திக், ரஞ்சித், சுந்தரராஜ், அனந்தி, காஸ்டிங் நடராஜ் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் முன்னோடிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...