கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

கோவையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் சுங்கம் பைபாஸ் சாலை மற்றும் துடியலூர் பகுதிகளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.


Coimbatore: கோவை நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, கோவை சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர் ஒடிசா மாநிலம் காந்தமால் பகுதியைச் சேர்ந்த பீஷ்மா தண்டி (29) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல், துடியலூர் இடிகரை அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (45) மற்றும் ஒடிசா மாநிலம் பாலாங்கீர் பகுதியைச் சேர்ந்த ஜடாபா பேஷ்ரா (33) என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...