கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

கோவையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் சுங்கம் பைபாஸ் சாலை மற்றும் துடியலூர் பகுதிகளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.


Coimbatore: கோவை நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, கோவை சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர் ஒடிசா மாநிலம் காந்தமால் பகுதியைச் சேர்ந்த பீஷ்மா தண்டி (29) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல், துடியலூர் இடிகரை அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (45) மற்றும் ஒடிசா மாநிலம் பாலாங்கீர் பகுதியைச் சேர்ந்த ஜடாபா பேஷ்ரா (33) என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...