கோவையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

கோவையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் சுங்கம் பைபாஸ் சாலை மற்றும் துடியலூர் பகுதிகளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.


Coimbatore: கோவை நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, கோவை சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர் ஒடிசா மாநிலம் காந்தமால் பகுதியைச் சேர்ந்த பீஷ்மா தண்டி (29) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல், துடியலூர் இடிகரை அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (45) மற்றும் ஒடிசா மாநிலம் பாலாங்கீர் பகுதியைச் சேர்ந்த ஜடாபா பேஷ்ரா (33) என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...