பொள்ளாச்சியில் முள்ளம்பன்றி வேட்டையாடிய 6 பேர் கைது: வனத்துறை நடவடிக்கை

பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைக்க முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொங்கலப்பம்பாளையம் பகுதியில் வனவிலங்கான முள்ளம்பன்றியை வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அந்தப் பகுதியில் குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொங்கலப்பம்பாளையம் ஆற்றுக்கரை பகுதியில் முள்ளம்பன்றியை பிடித்து சமைக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தெய்வராஜ், ரங்கசாமி, லோகேஷ், தீபன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் முள்ளம்பன்றியை வளைவைத்து பிடித்ததாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வனவிலங்கை வேட்டையாடி சமைத்ததாக வன குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வனத்துறையின் தீவிர முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...