பொள்ளாச்சியில் முள்ளம்பன்றி வேட்டையாடிய 6 பேர் கைது: வனத்துறை நடவடிக்கை

பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைக்க முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொங்கலப்பம்பாளையம் பகுதியில் வனவிலங்கான முள்ளம்பன்றியை வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அந்தப் பகுதியில் குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொங்கலப்பம்பாளையம் ஆற்றுக்கரை பகுதியில் முள்ளம்பன்றியை பிடித்து சமைக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தெய்வராஜ், ரங்கசாமி, லோகேஷ், தீபன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் முள்ளம்பன்றியை வளைவைத்து பிடித்ததாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வனவிலங்கை வேட்டையாடி சமைத்ததாக வன குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வனத்துறையின் தீவிர முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...