கோவை வனக்கல்லூரியில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கருத்தரங்கம்

கோவை வனக்கல்லூரியில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய-ஜப்பானிய கூட்டுறவு, வனத்துறை முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை வனக்கல்லூரி வளாகத்தில், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புது தில்லியில் உள்ள ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் இந்திய அலுவலக மேம்பாட்டுப் பிரிவு நிபுணர் சித்தார்த் பரமேஸ்வரன் பங்கேற்றார்.


சித்தார்த் பரமேஸ்வரன் தனது உரையில், தமிழகத்தில் காடுகள் வளர்ப்புத் திட்டம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டங்களுக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நான்கு கட்டங்களாக நிதியுதவி செய்து வருவதாகக் கூறினார். மேலும், தனியார் நிலங்களில் சுமார் 1.43 லட்சம் ஹெக்டேரில் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அறிவியல் ஆராய்ச்சியில் இந்திய-ஜப்பானிய ஆராய்ச்சி மையங்கள் இணைந்து செயல்படுவது இரு நாட்டு உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தமிழக அரசின் வனத்துறை செயலர் செந்தில்குமார், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்தும், வனத்துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதைக் குறித்தும் விளக்கினார்.


மனித-விலங்கு மோதல் குறித்த ஆய்வு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கோர் எர்த் டிரஸ்ட் அமைப்பின் கள அலுவலர் தானீஷ் பாஸ்கர் உரையாற்றினார். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் நிஷாந்த் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு மனித-விலங்கு மோதல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர்.


இக்கருத்தரங்கில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் முதுநிலை நிர்வாகி வகாமட்சு இஜி, தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனக் காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை சிறப்பு படைப் பிரிவு) சுதான்சு குப்தா, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழக பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற இயக்கத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தக் கருத்தரங்கம் ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைந்தது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...