கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு

கோவை - பகத் கி கோத்தி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக கோவை - பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்.06181 கோயம்புத்தூர் - பகத் கி கோத்தி வாராந்திர சிறப்பு ரயில் (வியாழக்கிழமைகளில்) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை (9 சேவைகள்) இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 2.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை பகத் கி கோதி-யை காலை 11.30 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண்.06182 பகத் கி கோதி - கோவை சிறப்பு ரயில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு பகத் கி கோதியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயிலில் ஏசி 3-அடுக்கு, ஏசி 3-அடுக்கு எகானமி, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள் இருக்கும்.

ரயில் நின்று செல்லும் இடங்கள்: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யர்ரகுன்ட்லா, கூடி, தோன், கர்னூல் சிட்டி, மஹ்பூப் நகர், கச்சேகுடா, காமரெட்டி, நிஜாமாபாத், முட்கேட், நந்தேட், பூர்ணா, ஹிங்கோலிம், டெக்கான், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், ஜலோர், மொகல்சர் மற்றும் சம்தாரி.

Newsletter

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...