தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியது. 1000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு 10,000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.



அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற 1000 தபால் அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈசுவரன் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில், மொழிகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில், 25 ஆயிரம் பேர் மட்டுமே தாய் மொழியாக கொண்ட சமஸ்கிருதத்திற்கு 61% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை சமஸ்கிருத நாடாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்," என்றார்.



"அடுத்த ஐந்தாண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ் மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கி தமிழ் மொழியை உலகம் எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடத்திலும் கையெழுத்து பெற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து தபால் அட்டைகளை அனுப்பவுள்ளதாகவும் ஈசுவரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...