தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியது. 1000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு 10,000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.



அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற 1000 தபால் அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈசுவரன் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில், மொழிகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில், 25 ஆயிரம் பேர் மட்டுமே தாய் மொழியாக கொண்ட சமஸ்கிருதத்திற்கு 61% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை சமஸ்கிருத நாடாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்," என்றார்.



"அடுத்த ஐந்தாண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ் மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கி தமிழ் மொழியை உலகம் எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடத்திலும் கையெழுத்து பெற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து தபால் அட்டைகளை அனுப்பவுள்ளதாகவும் ஈசுவரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...