திருப்பூரில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார் எம்எல்ஏ செல்வராஜ்

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத்தொகையையும் எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது குப்ரான் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற முகம்மது குப்ரானுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்க நாணயம், சுழற்கோப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், வரும் நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கவுள்ள ஹாசிமா, மித்ரா உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையினை எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி மேயர் திருமதி மல்லிகா, மாநகராட்சி ஆணையர் திரு. விநீத், திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் திரு. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...