திருப்பூரில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார் எம்எல்ஏ செல்வராஜ்

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத்தொகையையும் எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது குப்ரான் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற முகம்மது குப்ரானுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்க நாணயம், சுழற்கோப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், வரும் நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்கவுள்ள ஹாசிமா, மித்ரா உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையினை எம்எல்ஏ செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி மேயர் திருமதி மல்லிகா, மாநகராட்சி ஆணையர் திரு. விநீத், திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் திரு. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...