ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் ஆண்டு விழா

கோவை பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை வெர்டிகல் மனித வள மேம்பாட்டுத் தலைவர் எம்.செந்தில்குமார் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்பொது அவர் பேசுகையில், “வெளிநாட்டின் வெர்டிகல் நிறுவனத்தில் பணிபுரியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களை வெகுவாகப்பாராட்டினார். மேலும் இக்கல்லூரியின் பல மாணவர்களை வெர்டிகல் நிறுவனத்தில் பணிபுரிய அழைப்புவிடுத்தார். 

மாணவர்களாகிய நீங்கள், உங்கள் மனதிற்கு முழு திருப்தியளிக்கக் கூடிய துறையைத் தேர்ந்தெடுங்கள். மேலும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். படித்தலும் தெரிந்துகொள்ளுதலும் வாழ்நாள் முழுதும் அவசியம். பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டு அறிவைப் புதுப்பித்தால் தான், உங்கள் துறையில் வெற்றி பெற முடியும்” என்றார்.

எஸ்என்ஆர் அறக்கட்டளையின் கல்வி இயக்குனர் முனைவர் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார். உரையின் முடிவில், கல்லூரிப் படிப்பை 2017ல் நிறைவு செய்யும் மாணவர்களில் சிறந்தமாணவர் பி.ஷேர்ஐின் மற்றும் சிறந்த மாணவி கே.பப்புபிரித்தி ஆகியோருக்குத் தங்கப்பதக்கங்கள் வழங்கி கெளரவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர் பால்ராஜ், சென்ற ஆண்டில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். தொடர்ந்து, சென்ற ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் தகுதிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...