கோவை ராம்நகரில் 19 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

கோவை ராம்நகரில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.92,000 பணம் திருடப்பட்டுள்ளது. காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ராம்நகர் பகுதியில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.92,000 பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம்நகர் சரோஜினி தெருவைச் சேர்ந்த முஸ்ரத்துல்லாவின் மனைவி ஷெரீன் (32) கடந்த ஜூலை 11 ஆம் தேதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார். செல்லும் முன் தான் அணிந்திருந்த நெக்லஸ், கம்மல், வளையல் உள்ளிட்ட 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.92,000 பணத்தை பீரோவில் வைத்து பூட்டி விட்டுச் சென்றார்.

ஜூலை 28 ஆம் தேதி வீடு திரும்பிய ஷெரீன், பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெரீன் உடனடியாக காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லாததால், வழக்கம்போல் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

கோவை நகரில் அடிக்கடி நடைபெறும் இத்தகைய திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. போலீசார் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...