நீலிகோணாம்பாளையம் அருகே இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இருவர் கைது

கோவை நீலிகோணாம்பாளையம் அருகே, முன்விரோதம் காரணமாக 18 வயது இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இரு நபர்கள் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தராஜின் மகன் கார்த்திகேயன் (18), அப்பகுதியில் உள்ள சரோஜினி ரோட்டில் இருமொழி வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கார்த்திகேயனுக்கும் சிபு (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூலை 26 அன்று கார்த்திகேயன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிபு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திகேயனை தாக்கியவர்கள் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்த சிபு (30) மற்றும் நீலிகோணாம்பாளையத்தைச் சேர்ந்த ரெஷித் (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இருவரையும் ஜூலை 28 அன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...